தரங்கம்பாடி, ஜூன் 25 - தமிழறிஞர் சீகன்பால்கு-வுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபை யில் தமிழ்நாடு அரசு அறிவித்துள் ளதை, தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் வர வேற்றுள்ளனர். 1706 ஜூலை 9 அன்று கடல் வழி கப்பல் பயணமாக 222 நாட்கள் பயணித்து கிறிஸ்தவத்தை பரப்ப தரங்கம்பாடி வந்து தமிழுக்காக உழைத்தவர் தமிழறிஞர் சீகன்பால்கு. கிறிஸ்தவ மத போதகரான ஜெர்மனியைச் சேர்ந்த பாத்லோ மியு சீகன்பால்கு 10.7.1682 அன்று ஜெர்மனியில் சாக்சோனி மாநி லத்தில் உள்ள புல்நிட்ஸ் என்ற ஊரில் பிறந்தார்.
டென்மார்க் அரசர் 4 ஆம் பிரட்ரிக்கால் சமயப் பணி செய்ய அனுப்பப்பட்டு, 11.11.1705 அன்று தன் நண்பர் ஹென்ரிக் புளுசோவு டன் கோபன்ஹேகனில் இருந்து கப்பலில் இந்தியா புறப்பட்டார். 222 நாட்கள் கப்பல் பயணத்திற்கு பின் 9.7.1706 இல் தரங்கம்பாடி வந்தடைந்தார். அவர், தரங்கம்பாடி வந்ததன் நினைவாக நினைவுச் சின்னம் ஒன்று கடற்கரையையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தரங்கம் பாடி வந்த சீகன்பால்கு தமிழ்மொழி யின் மீது ஆர்வம் கொண்டு 8 மாதங்களில் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டார்.
அதைத் தொ டர்ந்து தமிழில் அச்சு எழுத்துகளை வடிவமைத்து, அச்சு கலையில் தமிழை கொண்டு வர பெரும் முயற்சி மேற்கொண்டு, இந்தியாவி லேயே முதன் முதலாக தரங்கம் பாடியில் தமிழில் அச்சுக் கூடத்தை 24.10.1712 அன்று அமைத்தார். 1715 ஆம் ஆண்டு இந்தியா விலேயே முதன் முதலாக பொறை யார் கடுதாசிப் பட்டறை என்ற கிராமத்தில் ஒரு காகிதம் தயா ரிக்கும் தொழிற்சாலையையும், அச்சு மை தயாரிக்கும் தொழிற்சா லையையும், பித்தளை, ஈயம் போன்ற உலோகங்களின் தமிழ் எழுத்துகளை உருவாக்கும் ஒரு எழுத்து தயாரிக்கும் கூடத்தையும் ஏற்படுத்தினார்.
சீகன்பால்கு தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அக ராதி, செந்தமிழ் அகராதி இந்து சமய கடவுள்களின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை ஓலைச்சுவடியிலிருந்து காகிதத் தில் அச்சேற்றி வெளியிட்டுள்ளார். தரங்கம்பாடியில் ஆசியாவின் முதல் புராட்டஸ்டண்டு (சீர்திருத்த) தேவாலயமான புதிய எருசலேம் ஆலயத்தை 1718 இல் கட்டியவர் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை நிறுவியதில் பெரும் பங்காற்றியவர்.
பெண்களுக்கான முதல் கல்வி நிலையம், விதவை களை ஆசிரியர்களாகக் கொண்டு பள்ளிக்கூடம், தையல் பயிற்சி பள்ளி, விடுதிகள் ஆகியவற்றை அமைத்து எளியவர்களின் கல்வி, சமூக முன்னேற்றத்திற்காக அரும் பாடு பட்டவர். வெறும் 13 ஆண்டு களே தரங்கம்பாடியில் வாழ்ந்த அவர், 23.2.1919 இல் இயற்கை எய்தி, அவர் கட்டிய ஆலயத்தி லேயே அடக்கம் செய்யப்பட்டார். சர்வ சமய உரையாடல்களை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி, மத நல்லிணக்கத்தை பேணிக் காத்தவர்.
தமிழுக்காக உழைத்து தமிழ் நூல்களை காகி தத்தில் அச்சேற்றி பெரும் பணியை செய்ததோடு, தமிழர்கள், பெண்க ளின் உரிமைகளுக்காக அக்காலத் திலேயே போராட்டங்கள் பல வற்றை செய்த சீகன்பால்குவின் வர லாற்றை அறிந்து கொள்ள அவ ரது நினைவாக மணிமண்டபம் கட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தொடர்ந்து தீக்கதிர் நாளிதழில் பல்வேறு கட்டு ரைகளும், செய்திகளும் வெளி யிடப்பட்டன. பூம்புகார் சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா எம்.முருகன் சட்டசபை யில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மானிய கோரிக்கையில் தமிழ் நாட்டில் முதன் முதலில் அச்ச கத்தை அமைத்து பெருமை சேர்த்த சீகன்பால்குவுக்கு சிலையுடன் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடு துறை மாவட்டக் குழு, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் வரவேற்று, திமுக அரசுக்கு நன்றி தெரிவித் துள்ளது.